Sunday 18 December 2011

தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?


alt

மாஸ்கோ : இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி அதற்கு சட்டரீதியாக ரஷ்யாவில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.  சைபீரியாவின் தோம்ஸ்க் நகரத்தின் அதிகாரிகள் பகவத் கீதையை தடை செய்ய கோரியுள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா வருகை தந்து கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கிருஷ்ணாவை நினைவு கூறுவதற்கான சர்வதேச குழு (ISKCON) எனும் அமைப்பின் நிறுவனரான பக்திவேதாந்த சுவாமி பிரபுதா என்பவர் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ள பகவத் கீதையை தடை செய்ய கோரியே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கு மத்தியில் பேதத்தையும் வேற்றுமையையும் ஏற்படுத்தும் தீவிர போக்கு கொண்ட பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. அது பிற மதங்கள் மேல் வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று மாஸ்கோவில் உள்ள 15,000 இந்தியர்கள் வாயிலாக கேட்டு கொண்டதாகவும் இஸ்கான் கூறியுள்ளது.

பகவத்கீதையை ஆய்வு செய்யுமாறு டோம்ஸ்க் மாநில பல்கலைகழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் அப்பல்கலைகழகம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து அவ்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெயர் வெளியிட விரும்பா தூதரக அதிகாரிகள் ஏற்கனவே பிரதமர் உள்ளிட்ட உயர் மட்ட அளவில் இப்பிரச்னை ரஷ்ய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னை குறித்து தாங்கள் கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். 

Wednesday 24 August 2011

அரை டவுசருக்கு அனுமதி போலீ (ஸ்) பாதுகாப்புடன் !?

அரை டவுசருக்கு அனுமதி போலீ (ஸ்) பாதுகாப்புடன் !?
கோழிக்கோடு : சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கிலும், சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுக் கூறவும் பாப்புலஃ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள, தமிழ்நாடு மாநில அரசுகள் தடைவிதித்தன. ஆனால், கேரளாவில் ஆயுதங்களை ஏந்திய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் அணிவகுப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புனலூர், தாமரச்சேரி, மஞ்சேரி, சாவக்காடு ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இந்த் அணிவகுப்பை சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் எதிர்ப்பதாகவும், பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்துவதை அனுமதிக்க இயலாது எனவும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தடை விதித்தனர்.

சீருடை அணிந்து அணிவகுப்பை நடத்துவது மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் என்பது சில மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வாதமாகும். ஆனால், இத்தடைகள் அமுலில் இருக்கவே அரை ட்ரவுஸரை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினத்தில் அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

பத்தணம்திட்டா, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் பல்வேறு நகரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தேசிய கொடியை ஏந்தி இவர்கள் நடத்திய ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளது.

மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அணிவகுப்புகளும், பேரணிகளும் நடத்தும்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிகழ்ச்சிக்கு மட்டும் தடை ஏற்படுத்திய நடவடிக்கைக்கு சமூக சேவகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆலுவா, பரவூர் ஆகிய இடங்களில் ஆயுதமேந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் பதசஞ்சலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னரே இடங்களை நிச்சயித்து அதிகாரிகளிடமிருந்து ஆவணங்கள் மூலம் அனுமதி பெற்ற பிறகே கடந்த வருடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. இதுவரை எங்கேயும் அணிவகுப்பின் பெயரால் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னரே விளம்பரப்படுத்தாமல் சில உயர் மட்ட நபர்களின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட-சிறுபான்மை சமூக மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தீவிரமாக பங்கேற்பதும், சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பிரவேசிப்பதையும் தடைச் செய்யும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நடத்திவரும் சதித்திட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரும் மக்கள் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் கேரள, தமிழ மாநில அரசுகள் ஆதரவளித்துள்ளன.

** மத்திய மாநில அரசுகள் ஒரு தீவீரவாத அமைப்புக்கு பயந்து பாதுகாப்பு கொடுத்து சுதந்திர தின அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் உருவிய வாளுடன் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துகிறார்கள். இது என்ன சுதந்திர தின அணிவகுப்பா முஸ்லிம், மற்றும் சிறுபான்மை மக்களுக்கு விடப்படும் கலவர எச்சரிக்கையா? என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். **
JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.


கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளான்.


தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார் .மேலும், இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சிந்திக்கவும்: முஸ்லிம் பெண்களே உசார்! ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு அஜண்டாவே இருக்கிறது முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றுவது, அல்லது கைவிடுவது. ஹிந்துவா இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வித வெறியை தங்கள் இயக்கத்தினரிடம் வளர்த்து வருகின்றனர். எதாவது ஒரு விசயத்தில் முஸ்லிம்களை நஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பது. ஒருவகையில் இவர்கள் ஹிந்த்துதுவா வெறி பிடித்த சைகோகள் என்று சொல்லலாம்.